காளை வளர்ப்பாளர்களை ஊக்குவிக்க புதிய முயற்சி!

காளை வளர்ப்பாளர்களை ஊக்குவிக்க புதிய முயற்சி!

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை தமிழக முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தில் முக்கியமாக திருச்சி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் இந்த முறை சென்னையிலும் சிறப்பாக நடைபெற உள்ளது.

ஜல்லிக்கட்டு காளைகளை தங்களது செல்லப் பிள்ளைகளாக வளர்க்கும் காளை வளர்ப்பாளர்கள் காளைகளுடன்  புகைப்படங்களை எடுத்து அனுப்பியும் வீடியோ காட்சிகளையும் திருச்சி விஷனுக்கு அனுப்பினால் செய்தியாக வெளியிடுகிறோம்.

காளை எவ்வளவு போட்டியில் பங்கேற்று உள்ளது வெற்றி விபரங்களையும் அனுப்பினால் அதுவும் கூடுதல் தகவலாக வெளியிடப்படும். தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பாதுகாக்க பாரம்பரியமான  நாட்டின காளைகளை தமிழகத்தில் தொடர்ந்து பாதுகாத்திட வேண்டும் வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn