நாடாளுமன்ற தேர்தல் - திருச்சியில் திமுக முதல் பொதுக்கூட்டம்

நாடாளுமன்ற தேர்தல் - திருச்சியில் திமுக முதல் பொதுக்கூட்டம்

திருச்சி மற்றும் பெரம்பலூர் திமுக கூட்டணி வேட்பாளர்களை வரும் 22ஆம் தேதி பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்த உள்ளார். சிறுகனூரில் பொதுக்கூட்டம் நடத்தப் போகும் இடத்தை அமைச்சர் நேரு ஆய்வு செய்தார்.

இதுக்குறித்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில்...திருச்சி மற்றும் பெரம்பலூர் தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் வரும் 22 ஆம் தேதி மாலை சிறுகனூரில் நடைபெறுகிறது. இதில் தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

இதில் கூட்டணிக் கட்சிகள் கலந்து கொள்ள உள்ளனர். 2024 ஆம் ஆண்டிற்காக தேர்தல் பிரச்சாரம் திருச்சி மாவட்டம் சிறுகனூரிலிருந்து தொடங்குகிறது. அந்த பிரச்சாரம் தேர்தலில் வெற்றிக்கான அறிகுறியாக இருக்கும் என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision