திருச்சியில் வாடகை வீட்டில் விபச்சாரம் - 2 பெண்கள், 8 ஆண்கள் கைது

திருச்சியில் வாடகை வீட்டில் விபச்சாரம் - 2 பெண்கள், 8 ஆண்கள் கைது

திருச்சிராப்பள்ளி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாசன் நகர் பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக மாவட்ட காவல் உதவி எண் (Help Line) 9487464651 மூலம் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்,

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.வீ.வருண்குமார் உத்தரவின் பேரில், ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் ஆளினர்கள் நேற்று (27.10.2023) அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போதுதிருச்சி நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் (32) என்பவர் அங்கு இரண்டு பெண்களை வைத்து கடந்த சில தினங்களாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது.

மேலும், வாடிக்கையாளர்களாக இருந்த 7 நபர்கள், ஆக மொத்தம் 8 நபர்களின் மீது சோமரசம்பேட்டை காவல் நிலைய குற்ற எண். 301/23-ன்படி வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து, ரூ.70,000/- பணம், 4 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 12 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், மேற்படி வழக்கின் A-9 வினோத் (தலைமறைவாக இருந்து வருகிறார்) என்பவர் ஜெயலட்சுமி என்பவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சாரத்திற்கு பயன்படுத்தியுள்ளார் என தெரியவருகிறது. விபச்சாரத்திற்கு, வீட்டை வாடகைக்கு அனுமதித்த வீட்டின் உரிமையாளர் ஜெயலட்சுமி க/பெ குப்புசாமி, திருச்சி என்பவரும் மேற்படி வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் திருச்சி மாவட்ட அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இதுபோன்ற, குற்ற நிகழ்வுகள் பற்றிய தகவல்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 9487464651 (Help Line) எண்ணிற்கு தெரிவிக்கவும். தகவல் தெரிவிப்பவர்களின் அடையாளம் இரகசியம் காக்கப்படும்.

மேலும், நல்ல தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்பதை தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision