திருச்சியில் ராம.கோபாலனுக்கு மணிமண்டபம் அடிக்கல் நாட்டப்பட்டது!

திருச்சியில் ராம.கோபாலனுக்கு மணிமண்டபம் அடிக்கல் நாட்டப்பட்டது!

Advertisement

இந்து முன்னணி நிறுவனத் தலைவர், ராம.கோபாலன் கடந்த செப்டம்பர் மாதம் 29ம் தேதி சென்னையில் காலமானார். அவரது உடல் திருச்சி சீராத்தோப்பில் உள்ள பாரதியார் குருகுலம் பண்பாட்டு பயிற்சி கல்லூரி வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு சமாதி அமைக்கப்பட்டது.

Advertisement

117வது நாளான இன்று(25.01.2021) அங்கு மணிமண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை கணபதி, மகாலட்சுமி ஹோமத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மந்திரங்கள் முழங்க வாஸ்து ஹோமம், வாஸ்து பூஜை நடந்தது. ஸ்தபதி மகாலிங்கம் மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டி வெண்கல செங்கல்லை வைத்து மணிமண்டப பணியை துவக்கி வைத்தார். பாஜக மாநில தலைவர் முருகன் மணிமண்டப கட்டுமான பணிக்கு நன்கொடை வழங்கினார். 

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். பொது செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட பாஜ கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement