சாலை வசதி கேட்டு முள்வேலி அமைத்து போராட்டம்

சாலை வசதி கேட்டு முள்வேலி அமைத்து போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதி நடுப்பட்டி ஊராட்சியில் அண்ணாவி களம்மற்றும் களம் பகுதியில் சுமார் இங்கு 50க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதியில் உள்ளன.

அண்ணாவிக்களம் பகுதியில் ஏற்கனவே சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது. களம் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு சாலைகள் வசதி செய்து தரப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை சாலை வசதி மயான வசதி பாதை உள்ளிட்ட வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை எனக் கூறி பொதுமக்கள் சாலையின் நடுவே முள் கட்டுகளை வெட்டி போட்டு சாலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வையம்பட்டி காவல் ஆய்வாளர் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளித்து போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டத்தால் அந்த பள்ளியில் செல்லும் தனியார் பள்ளி வாகனங்கள் பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்வோர் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்த மறியலில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision