சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.54 கோடி

சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.54 கோடி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி (21.02.2023) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், கோயில் இணை ஆணையா் சி.கல்யாணி தலைமையில் அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் இருந்தனர். இதில், திறக்கப்பட்ட உண்டியல்களிலிருந்து ரூ.1 கோடியே 54 லட்சத்து 53 ஆயிரத்து 052மும், 3 கிலோ 924 கிராம் தங்கம், 6 கிலோ 118 கிராம் வெள்ளி, வெளிநாட்டு ரூபாய் 172 ஆகியவை கிடைக்க பெற்றது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn