திருச்சியில் வங்கி ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி

திருச்சியில் வங்கி ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி

திருச்சி மணிகண்டம் அருகே உள்ள கள்ளிக்குடி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மார்க்கெட் பகுதியில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த ஏடிஎம்மையத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பொழுது ஏடிஎம் மையத்திலிருந்து அலாரம் அடிக்கவும், அங்கிருந்து கொள்ளையர்கள் தப்பி ஓடி உள்ளனர். இச்சம்பவம் குறித்து சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளர் மணிகண்டம் காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மணிகண்டம் போலீசார் பார்வையிட்டனர்.

அப்பொழுது ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்கும் முயற்சியில் கொள்ளையர்கள் ஈடுபட்டிருப்பதும் அலாரம் அடித்ததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றதும் தெரியவந்தது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision