சாலையில் சேதமான பாதாள சாக்கடை மேல்மூடி சீரமைக்க கோரிக்கை

சாலையில் சேதமான பாதாள சாக்கடை மேல்மூடி சீரமைக்க கோரிக்கை

திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து பால்பண்ணை செல்லும் வழியில் வரகனேரி பஜார் திரும்பும் முன்பு சாலையில் பாதாள சாக்கடை மூடி உடைந்து உள்ளது. இதை உடனடியாக சரி செய்ய மக்கள் கோரிக்கை வைத்த நிலையில் போர் கால அடிப்படையில் உடைந்த பாதாள சாக்கடை மூடி மேல் பேரிகார்டு வைக்கப்பட்டது.

ஆனால் இன்றோடு முன்று நாட்கள் ஆகியும் மூடி சரி செய்யப்படவும் இல்லை, பேரிகார்டு அகற்றப்படவும் இல்லை. அசபாவிதம் ஏற்படும் முன் உடனடியாக மூடியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision