திருச்சி அடுக்குமாடியில் ஏசி வெடித்ததில் குடியிருப்பு வாசிகள் அலறி அடித்து ஓட்டம்

திருச்சி அடுக்குமாடியில் ஏசி வெடித்ததில்  குடியிருப்பு வாசிகள் அலறி அடித்து ஓட்டம்

திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அதில் உள்ள ஒரு வீட்டில் ஏசி வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அடுக்குமாடி முழுவதும் புகைமூட்டம் இருந்ததால் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் அலறி கொண்டு வெளியே ஓடினர். 

பின்னர் அடுக்குமாடி குடியிருப்புக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த தீ விபத்தால் அதிகளவு புகைமூட்டம் ஏற்பட்டத்தால் அந்த வீட்டிற்குள் செல்ல முடியாமல் தீயணைப்பு வீரர்கள் தவித்தனர். மேலும் வயதானவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

ஏசி குறைந்த மின் அழுத்தம் காரணமாக வெடித்துள்ளது என தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நான்கு மாடி குடியிருப்பில் 24 வீடுகள் உள்ளது. சிறு குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களை வைத்து உள்ளே சென்று யாரும் சிக்கி உள்ளார்களா என்று பார்த்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn