திருச்சி மேயர் வார்டில் பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்.

திருச்சி மேயர் வார்டில் பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்.

திருச்சி மாநகராட்சி 27வது வார்டு தென்னூர் பட்டாபிராமன் சாலை. இந்த வார்டு உறுப்பினர் மேயர் அன்பழகன். இவரது வார்டில் கடந்த 20 நாட்களாக குடிதண்ணீர் வராததால் மாநகராட்சி அதிகாரி மற்றும் மேயரிடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். 

எவ்வித நடவடிக்கை எடுக்காததால் திமுக மேயரை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்..... குடி தண்ணீருடன் சாக்கடை நீர் கலந்து வருவதால் பலவகை தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலமுறை மாநகராட்சி அதிகாரி மற்றும் மேயரிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் மேயரை கண்டித்து சாலை மறியல் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உத்திரவாத அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

 https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision