சமயபுரம் கண்ணணூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தபடும் -அமைச்சர் கே.என்.நேரு

சமயபுரம் கண்ணணூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தபடும் -அமைச்சர் கே.என்.நேரு

சமயபுரம் நால்ரோட்டில் சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு, எம்எல்ஏ கதிரவன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

அப்போது அமைச்சர் கே.என. நேரு பேசியதாவது... சமயபுரம் பேரூராட்சி தொடர்ந்து அதிமுக வசம் உள்ளது. இந்த முறை திமுக கைப்பற்றினால் இப்பேரூராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்.

அடுத்த முறை சமயபுரம் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படுமென நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn