சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை விபரம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை விபரம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மாதந்தோறும் இருமுறை எண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று (08.12.2024) உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.

இதில் ரூ.1கோடியே 33 லட்சத்து 67ஆயிரத்து 737 ரொக்கமும், 2 கிலோ 842 கிராம் தங்கமும், 4 கிலோ 383 கிராம் வெள்ளியும், 133 வெளிநாட்டு கரன்சிகள், 990 வெளிநாட்டு நாணயங்கள் இருக்கப்பெற்றன.

உண்டியல் திறப்பில் கலந்துக் கொண்டவர்கள் விவரம் : 

1. சி.கல்யாணி, இணை ஆணையர் / செயல் அலுவலர்.

2. அ.இரா.பிரகாஷ், இணை ஆணையர்/தக்கார் இரட்டை பூட்டு அலுவலர், திருச்சி.

3. ஆ.இரவிசந்திரன், உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்கோயில், திருச்சி

4. தி.அனிதா, உதவி ஆணையர், இந்து சமயஅறநிலையத்துறை, புதுக்கோட்டை

5. திருக்கோயில் கண்காணிப்பாளர்கள்/ செயல் அலுவலர்கள், இத்திருக்கோயில்

6. நா. சீனிவாசன், ஆய்வாளர், இந்து சமய அறநிலையத்துறை, மண்ணச்சநல்லூர்

7. திருக்கோயில் பணியாளர்கள், இத்திருக்கோயில்.

8. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision