மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் - காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் - காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் பகுதிகளில் மண் மற்றும் கனிம வளங்கள் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் திருச்சி புவியியல் மற்றும் சுரங்கத்துறை துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

அதன் அடிப்படையில் உதவி இயக்குனர் பாலமுருகன் மற்றும் உதவி புவியியலாளர் ஜெகதீசன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது பச்சபெருமாள்பட்டி பகுதியில் வேகமாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்திய பொழுது, டிரைவர் இறங்கி ஓடி தலைமறைவானார். விசாரணையில் முறையான அனுமதியின்றி மண் கடத்தப்பட்டது தெரியவந்தது.

இதுக்குறித்து உடனடியாக பாலமுருகன் உப்பிலியபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் லாரியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து லாரியை ஒட்டி வந்த டிரைவர் நரசிங்கபுரத்தைச் சேர்ந்த பாரதிராஜாவையும், லாரியின் உரிமையாளர் பற்றியும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision