ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் ஒருநாள் மூலவர் தரிசனம் கிடையாது

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் ஒருநாள் மூலவர் தரிசனம் கிடையாது

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வருகிற ஆனி மாதம் 17-ம் தேதி (02.07.2023) ஞாயிற்றுக்கிழமை அன்று மூலவர் பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் என்பதால் அன்று முழுவதும் மூலஸ்தானத்தில் பெருமாளை தரிசனம் செய்ய இயலாது.

மறுநாள் ஆனி மாதம் 18ம் தேதி (03.07.2023) திங்கள்கிழமை அன்று மாலை 4:30மணி முதல் மூலஸ்தானத்தில் பெருமாளை தரிசனம் செய்யலாம். மேலும் மூலவர் பெருமாளுக்கு தைலக்காப்பு சாற்றப்பட்டுள்ளதால்

அது உலரும் வரை மூலவர் பெருமாளின் திருமுகத்தை மட்டுமே தரிசிக்க இயலும் என்று பக்தர்களுக்கு ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn