மாநில அளவிலான கால்பந்து வீரர், வீராங்கனைகள் தேர்வு நாள் மாற்றம்

மாநில அளவிலான கால்பந்து வீரர், வீராங்கனைகள் தேர்வு நாள் மாற்றம்

கன மழையின் காரணமாக மாநில அளவிலான கால்பந்து வீரர், வீராங்கனைகள் தேர்வு இடம் மற்றும் நாள் மாற்றம் செய்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை: சென்னையில், தொடர்ந்து பெய்துவரும் கன மழையின் காரணமாக மாநில அளவிலான கால்பந்து வீரர், வீராங்கனைகள் தேர்வு இடம் மற்றும் நாள் மாற்றப்பட்டுள்ளது.

திருச்சி அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வரும் 15ம் தேதியன்று மாணவியருக்கான தேர்வு மற்றும் 16ம் தேதி மாணவர்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH 

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO