தமிழ்நாடு ஏ ஐ டி யு சி கட்டிட தொழிலாளர் சங்க மாநில அளவிலான அரசியல் விளக்க பேரவை கூட்டம்

தமிழ்நாடு ஏ ஐ டி யு சி கட்டிட தொழிலாளர் சங்க மாநில அளவிலான அரசியல் விளக்க பேரவை கூட்டம்

தமிழ்நாடு ஏ ஐ டி யு சி கட்டிட தொழிலாளர் சங்க மாநில அளவிலான அரசியல் விளக்க பேரவை கூட்டம் திருச்சியில் உறையூர் கைத்தறி நெசவாளர் திருமண மண்டபத்தில் செப்டம்பர் 4ல் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் திருச்சி மாமன்ற உறுப்பினருமான க. சுரேஷ் தலைமை வகித்தார்

முன்னிலை தோழர்கள் இரா.முருகன், ஆர்.பாலகிருஷ்ணன், ஜிபிஎஸ் வடிவேல் கவிதா, ஆர்‌.தில்லைவனம், எஸ் சின்னசாமி, ஆர். துரைசாமி, எஸ்.சேது, ஜி.பாலன், ஏ எஸ் சங்கர் மேஸ்திரி சி நந்தினி, துணைப் பொதுச் செயலாளர் சேலம் முனுசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.

தொழிலாளி வர்க்க அரசியல் என்கிற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கே சுப்பராயன் உரையாற்றினார். பறிக்கப்படும் தொழிலாளர்கள் உரிமை என்கிற தலைப்பில் ஏ ஐ டி யு சி தேசிய செயலாளர் டி எம் மூர்த்தி, அமைப்பாய்த் திரள்வோம் சவால்களை எதிர்கொள்வோம் என்கிற தலைப்பில் ஏ ஐ டி யு சி பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உரையாற்றினார்

கூட்டத்தில் உழைக்கும் வர்க்கத்தின் உன்னத தலைவர்கள் என்கிற துரைசாமி எழுதிய நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு கட்டிட சங்க பொதுச்செயலாளர் என் செல்வராஜ் தலைமை வகித்தார். திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் கே சுப்பராயன் புத்தகத்தை வெளியிட தேசிய செயலாளர் டி எம்.மூர்த்தி, மாநில செயலாளர் ராதாகிருஷ்ணன் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவா பெற்றுக்கொண்டனர். திருச்சி மாவட்ட கட்டட சங்க செயலாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision