திருச்சியில் ஆசிரியை பள்ளியில் திடீர் மரணம்

திருச்சியில் ஆசிரியை பள்ளியில் திடீர் மரணம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நடராஜபுரம் கிராமத்தைச் சார்ந்த ஆரோக்கியசாமி மனைவி அன்னாள் ஜெய மேரி (52). இவர் புள்ளம்பாடி அருகே உள்ள ஆலம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 1999 முதல் இதனால் வரை இடைநிலை ஆசிரியராக 22 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர் இப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

தற்பொழுது மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதில் எமிஸ் ஆன்லைன் டெஸ்ட் மூலம் மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. மாணவர்களுக்கு எமிஸ் ஆன்லைன் டெஸ்ட் மூலம் தேர்வானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல்வேறு கிராமங்களில் தொலைத்தொடர்பு துறையில் இன்டர்நெட் வசதி சரியாக கிடைக்காத காரணத்தால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இந்த எமிஸ்ட் டெஸ்ட் நடத்துவதற்கு இயலாமல் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர் .

இந்நிலையில் ஆசிரியை அன்னாள் ஜெய மேரி மாணவர்களுக்கு எமிஸ் ஆன்லைன் தேர்வு நேற்றைய தினம் நடத்தியுள்ளார். அதில் நாட் அசஸ்மென்ட் என்று தகவல் கிடைத்த காரணத்தால் உடனடியாக அருகில் உள்ள பள்ளி ஆசிரியரிடம் இது குறித்து உரையாடல் செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று மயங்கி கீழே விழுந்தவுடன் வகுப்பில் உள்ள மாணவ, மாணவியர்கள் உடனடியாக தலைமையாசிரியர் அறைக்கு சென்று டீச்சர் மயங்கி கீழே விழுந்துவிட்டார் என்று கூறியவுடன் அருகில் உள்ள ஆசிரியர்கள் ஓடி வந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்து அவரை புள்ளம்பாடியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பள்ளியில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். இதனால் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision