மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம்,மணப்பாறையில் பாரத ஸ்டேட் பேங்க் அருகில், திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில்அதானி நிறுவனத்திற்கு மக்கள் பணத்தை முறைகேடாக வழங்கிய மோடி அரசை கண்டித்தும்,அராஜக அரசியலுக்கு அடிபணிய மாட்டோம், துணை போகாதே துணை போகாதே அதானியின் கொள்ளைக்கு துணை போகாதே,பொய் வழக்கு போடாதே என கோஷங்களை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn