திருச்சியில் மகளிர் கிரிக்கெட் போட்டி 23ம் தேதி தொடக்கம்

திருச்சியில் மகளிர் கிரிக்கெட் போட்டி 23ம் தேதி தொடக்கம்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து திருச்சி மண்டல மகளிர் கல்லுாரிகளுக்கு இடையிலான டி-20 கிரிக்கெட் போட்டிகளை நடத்துகிறது.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லுாரி, விக்னேஷ் வித்யாலயா, சாரநாதன் பொறியியல் கல்லுாரி ஆகிய இடங்களில் பிப்.23ல் தொடங்கி 25ம் தேதி வரை போட்டிகள் நடக்கிறது.

15 கல்லூரிகள் கலந்து கொள்ளும் போட்டியை தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் சங்க குழுவினர் பார்வையிட்டு சிறந்த வீராங்கனைகளை தேர்வு செய்வார்கள் என்று திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn