காலையில் கதறவிட்ட கமிஷனர் - பதறி அடித்து வந்த அதிகாரிகள்.

காலையில் கதறவிட்ட  கமிஷனர் - பதறி அடித்து வந்த அதிகாரிகள்.

திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வைத்திநாதன் மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து சரவணன் திருச்சி மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் மாநகராட்சி பணிகளை கண்காணித்து வரும் அவர், இன்று காலை திருச்சி அரியமங்கலம் மண்டலம் 3க்கு உட்பட்ட மலையப்ப நகரில் அமைந்துள்ள பிறப்பு, இறப்பு பதிவு செய்யும் அலுவலகத்திற்கு திடீரென பார்வையிட வந்தார்.

அங்கு வந்த அவர் கோப்புகளை ஆய்வு செய்து செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இதை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் பதறி அடித்து அலுவலகத்திற்கு வந்தனர். இதனால் இன்று காலை அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision