இன்ஸ்பெக்டர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

இன்ஸ்பெக்டர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் பர்மா காலனி நடு தெருவை சேர்ந்தவர் அருள்சாமி. இவர் பாலக்கரை போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் அவரது உடல்நிலை பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் குண்டூர் பகுதியில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. அப்பொழுது அருள்சாமி உடலுக்கு திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் தலைமையில் போலீசார் அரசு மரியாதை  செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision