திருச்சி பத்திரிகையாளர்களிடம் ஐ எம் சாரி என சொன்ன அமைச்சர்

திருச்சி பத்திரிகையாளர்களிடம் ஐ எம் சாரி என சொன்ன அமைச்சர்

திருச்சியில் திமுக பொது செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில்.... 

முக்கொம்பு கொள்ளிடம் கதவணை இன்னும் ஒரு வார காலத்தில் திறப்பு விழா ஏற்பாடு செய்யப்படும். அமலாக்கத்துறை மணல் குவாரிகளில் கொள்ளை நடந்திருப்பதாக குறிப்பிட்டதற்கு இல்லை என நிரூபித்து இருக்கிறோம் என்றார். அதிமுக ஆட்சி காலத்தில் ஊழல்கள் நடைபெற்று உள்ளது ஆனால் திமுக அமைச்சர்கள் மீது தொடர்ந்து சோதனைகள் நடத்தப்படுவது குறித்த கேள்விக்கு அவங்க வேற நாங்க வேற என பதில் அளித்தார். திருச்சியை தலைநகராக்க வேண்டுமென பேசி உள்ளீர்கள் இது தொடர்பாக முதல்வரிடம் பேசி கோரிக்கை வைப்பீர்களா என்று கேட்டதற்க்கு என் ஆசையை சொன்னேன் என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மனம் விட்டு பேசிய அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் நீங்க வந்திருக்கிறதை சொல்ல வேண்டாமா? திருச்சி பிரஸ் தான் ராஜ கம்பீரமான பிரஸ். கலைஞருக்கு பிடித்த பிரஸ். கண்ணியமான பிரஸ். நீங்கள் வந்திருப்பது சொல்லி இருந்தால் உள்ளே உட்கார வைத்து பேசி இருப்பேன். (I am sorry)ஐ எம் சாரி என நெகிழ்ச்சியுடன் நன்றி கூறி புறப்பட்டு சென்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision