ஊர்க்காவல் படை பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தாய்

ஊர்க்காவல் படை பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தாய்

ஊர்க்காவல் படை பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தாய்

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் அலகரை ஊராட்சிக்கு உட்பட்ட அரியனாம் பேட்டை கிராமத்தை சேர்ந்த சந்திரபோஸ் (43) இவரது மனைவி மஞ்சுளா (35), இவர் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது இவர்களுக்கு ஹேமேஷ் (8) என்கிற மகன் உள்ளார், இந்த சிறுவன் அரியனாம்பேட்டை தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இதில் மஞ்சுளாவிற்கு சிறிது மனநிலை பாதிக்கப்பட்டு அவரது அம்மா வீட்டில் கடந்த ஒரு மாதமாக இருந்ததாகவும், தற்போது கடந்த வியாழக்கிழமை ரூ.1000 கலைஞர் உரிமைத் தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்க அவரது கணவரின் ஊரான அரியணாம் பேட்டைக்கு தனது தாய் அன்னக்கிளியுடன் வந்துள்ளார்.

இந்நிலையில் கணவர் வீட்டிற்கு வந்த மஞ்சுளாவை அவரது தாய் அன்னக்கிளி சிகிச்சை பெறுவதற்கு சனிக்கிழமை கூப்பிட்டதாகவும் அப்போது மஞ்சுளா தனது தாயுடனும் மாமியார் மாமனார் உடனும் தகராறு செய்து சிகிச்சைக்கு செல்ல மறுத்ததாகவும், இதனால் தாய்க்கும் மகளுக்கும் இடையே சனிக்கிழமை இரவு வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் இருவரும் தூங்கி விட்டதாகவும், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவரது தலையின் கல்லை போட்டு கொன்றதாக லால்குடி அருகே உள்ள தாளக்குடி சேர்ந்த சேட்டு மனைவி அன்னக்கிளி (55) தொட்டியம் காவல் நிலையத்தில் வந்து சரணடைந்தார். தகவலறிந்து சம்பவம் நடந்த இடத்தை முசிறி டிஎஸ்பி யாஸ்மின், தொட்டியம் இன்ஸ்பெக்டர் முத்தையன் மற்றும் உதவி ஆய்வாளர் ஆசைத்தம்பி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு இறந்த மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுக்குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.