மது வாங்கி தர மறுத்தவருக்கு சரமாரி கத்திக்குத்து

மது வாங்கி தர மறுத்தவருக்கு சரமாரி கத்திக்குத்து

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆர்.எஸ் வையம்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (38). இவர்  போர்வெல் வாகனத்தில் ஹெல்ப்பராக பணியாற்றி வருகிறார்.

இவர் துவரங்குறிச்சி செல்வதற்கு வையம்பட்டி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த போது அங்கு வந்த போதை ஆசாமி சடையம்பட்டியைச் சேர்ந்த சரவணன் (34 ) என்பவர் விஜயகுமாரிடம் எனக்கு மது வாங்கி தர வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு விஜயகுமார் நீ யார் என்று எனக்குத் தெரியாது எதற்கு நான் உனக்கு மது வாங்கி தர வேண்டும் என கேட்டுள்ளார்.

அதற்கு விஜயகுமாரை தகாத வார்த்தையால் சரவணன் திட்டி உள்ளார. மேலும் விஜயகுமார் என்னிடம் பணம் இல்லை என்று கூறி உள்ளார். சரவணன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக விஜயகுமாரை குத்தி விட்டு கத்தியுடன் சரவணன் காவல்  நிலையத்தில் சரணடைந்தார்.

மேலும் கத்தி குத்துப்பட்ட விஜயகுமாரை வையம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கத்திக்குத்தி சம்பவத்தால் வையம்பட்டி பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision