கட்டுப்பாட்டை இழந்து வயலில் இறங்கிய டிராக்டர்

கட்டுப்பாட்டை இழந்து வயலில் இறங்கிய டிராக்டர்

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கோட்டப்பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாய பணிகளுக்காக சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்த நிலையில் பி மேட்டூர் பகுதியில் விவசாய பணிகளை முடித்துவிட்டு கோட்டப்பாளையத்திற்கு வந்து கொண்டிருந்தார்.

 அப்பொழுது தெற்கு விஸ்வாம்பாள் சமுத்திரம் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் சாலையை விட்டு இறங்கி வயலில் கவிழ்ந்தது. யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில் ட்ரெய்லருடன் கவிழ்ந்த டிராக்டர் பொக்லைன் மூலம் மீட்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision