துக்க நிகழ்வுக்கு சென்றவருக்கு வீட்டில் நடந்த துயரம்.

துக்க நிகழ்வுக்கு சென்றவருக்கு வீட்டில் நடந்த துயரம்.

சமயபுரம் அருகே உள்ள 
மகாளிக்குடி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த சந்துரு . இவர் கடந்த 10ம் தேதி  உறவினர் வீட்டில் துக்கம் நிகழ்வுக்கு  செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

இன்று (15.05.2023) வீட்டிற்கு வந்த சந்துரு வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 8. சவரன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் பணம்
திருடி சென்றதை  அறிந்த சந்துரு சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சமயபுரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn