திருச்சி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் தற்கொலை

திருச்சி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் தற்கொலை

திருச்சி கி.ஆ.பெ விசுவநாதம் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் சார்ந்த இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் பட்டப்படிப்புகளை பயின்று வருகின்றனர். இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிபவர்களுக்கு மருத்துவமனை வளாகத்தில் தங்குவதற்கு விடுதி உள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ரஞ்சித் (23) பயிற்சி மருத்துவர் இன்று (17.09.2021) அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று மருத்துவமனைக்கு பணிக்கு வராததால் அவரது அறையை மற்ற மாணவர்கள் திறந்து பார்த்தபோது தூக்கில் தொடங்கிய நிலையில் இருந்துள்ளார்.

உடனடியாக உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு திருச்சி அரசு மருத்துவகல்லூரியில் பயின்று பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றிய ரஞ்சித் தற்கொலைக்கான காரணம் குறித்து அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn