போக்குவரத்து கழக ஊழியர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை -போலீசார் விசாரணை

போக்குவரத்து கழக ஊழியர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை -போலீசார் விசாரணை

திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, கவரப்பட்டி மேற்குதெரு பகுதி சேர்ந்தவர் ராஜா (30). இவர் சென்னையில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் இளநிலை உதவியாளராக வேலை செய்து வந்துள்ளார்.

இவருக்கு திருமணம் ஆகி வினோதினி (20) மனைவி உள்ளார். ராஜா கவரப்பட்டி பகுதி பொதுமக்களிடம் பலகார சீட்டு மற்றும் சிறுசேமிப்பு சீட்டு நடத்தி சுமார் 100க்கும் மேற்பட்ட நபர்களிடம் ஒரு கோடி அளவில் பணம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சிறுசேமிப்பு சீட்டு கட்டிய வாடிக்கையாளர்கள் சிலர் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். பணம் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்ததால் இது குறித்து அப்பகுதியினர் சிலர் காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுபற்றி தகவல் தெரிந்த ராஜா பணம் கொடுக்க முடியாத விரக்தியில் நேற்று 23ந் தேதி தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார். இதையடுத்து பலத்த தீக்காயம் அடைந்த ராஜாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் ராஜா இன்று பரிதாபமாக உயிரிழந்தார். 

சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பண்ணன் மற்றும் போலீசார் வழக்குபதிந்து ராஜா உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision