திருச்சி காவிரியில் ஆடிப்பெருக்கு விழா - பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம்

திருச்சி காவிரியில் ஆடிப்பெருக்கு விழா - பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம்

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி ஆற்று பகுதியில் பொதுமக்கள், புதுமண தம்பதிகள் காவிரி தாய்க்கு பெரிய வாழை இலை போட்டு அதில் முக்கனி உள்ளிட்ட பல்வேறு வகையான பழ வகைகளை வைத்தும், காப்பரிசி, காதாளை கருகமணி, முளைபாரி வைத்தும், சுமங்கலி பெண்கள் தங்களுடைய கழுத்தில் மஞ்சள் கயிற்றை கட்டி கொண்டும் புதுமண தம்பதிகள் தாலி பிரித்து கட்டும் வைபவங்கள் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரி கொள்ளிடம் ஆறு உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மாவட்ட நிர்வாகத்தினால் அறிவுறுத்தப்பட்ட இடங்களைத் தவிர வேறு இடங்களில் ஆடி-18 திருநாளில் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாநகரப்பகுதிகளில் அம்மா மண்டபம், கருடா மண்டபம், கீதாபுரம், சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை . காந்தி படித்துறை, ஓடத்துறை,. அய்யாளம்மன் படித்துறைகளில் ஆடிபெருக்கு மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடினர்.

ஆற்றுப் பகுதிகளில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் ஆற்றில் இறங்கி குளிப்பதை முற்றிலும் தவிர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட நீரில் திருச்சி முக்கொம்பு விற்கு 10 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.  

காவிரி கரையோரங்களில் பொதுமக்கள் ஆடிப்பெருக்கை பாதுகாப்பாக கொண்டாட காவல்துறை தீயணைப்பு துறை உள்ளிட்டடோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர் .பொதுமக்கள் காவிரி ஆற்றில் கரைகளில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடலாம் ஆற்றினுள் இறங்கி குளிப்பதற்கு தடையும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision