நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளித் திட்டத்தில் சேர திருச்சி மாவட்ட ஆட்சியர் அழைப்பு

நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளித் திட்டத்தில் சேர திருச்சி மாவட்ட ஆட்சியர் அழைப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் கல்வி பயின்ற முன்னாள் மாணவ, மாணவியராகிய பலரும், தாங்கள் கல்வி பயின்ற அரசு பள்ளிக்கு பெருமை சேர்க்கும் வகையில் பல தரப்பட்ட துறைகளில் பணிபுரிந்து வருவதை அறிந்து பெருமை அடைகிறேன்.

அவ்விதத்தில் தாங்கள் கல்வி பயின்ற அரசு பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி தரம் மேம்பட வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பீர்கள் என்றும் நம்புகிறேன். தற்போது தமிழ்நாடு அரசு, அரசு பள்ளியின் உட்கட்டமைப்பு வசதி மற்றும் கல்வி தரத்தினை மேம்படுத்துதல் போன்ற செயல்பாடுகளில் மிகவும் கவனம் செலுத்தி சிறப்பான திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி கொண்டு வருகிறது.

இது சார்ந்து முதலமைச்சரால் தொடங்கப்பட்ட சிறப்புத் திட்டமான நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளித் திட்டத்தில் பல மாவட்டங்களை சார்ந்த அரசு பள்ளி முன்னாள் மாணவ, மாணவியர் பங்கு பெற்று பள்ளிக்கு தேவையான ஆக்கபூர்வமான உதவிகளை செய்து வருகிறார்கள்.

எனவே நம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ, மாணவியர்கள் அனைவரும் இத்திட்டத்தில் இணைந்து தாங்கள் படித்த பள்ளிக்கும் திருச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் https://nammaschool.tnschools.gov.in என்ற இணைய தளம் மூலம் தாங்கள் படித்த பள்ளியின் உட்கட்டமைப்பு வசதி மற்றும் கல்வி தரத்தினை மேம்படுத்த தங்களால் இயன்ற பங்களிப்பை முன்வந்து கொடுத்து உதவுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn