திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் பேருந்து, 2 கார் மோதி விபத்து

திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் பேருந்து, 2 கார் மோதி விபத்து

கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து திருச்சி நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திருச்சி கம்பரசம்பேட்டையில் அருகே வந்த போது பேருந்து எதிரே வந்த கார் பேருந்து மீது மோதாமல் இருப்பதற்காக, காரை இடது புறமாக திருப்பிய போது எதிர்பாராத விதமாக கார் சாலையோர பள்ளத்தில் குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் கார் டிரைவர் உள்ளிட்ட நான்கு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் பேருந்துக்கு முன்னே சென்ற கார் மீது பேருந்து மோதி காரின் வலதுபுற பகுதி சேதமடைந்தது. இதே போல் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இந்த விபத்து குறித்து ஜீயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் நான்கு மற்றும் கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் ஆங்காங்கே சாலை தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதையும் மீறி அதிவேகத்துடன் வாகனங்கள் செல்வதால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn