திருச்சியில் நட்சத்திர விடுதி பல கோடி வாடகை பாக்கி - அதிகாரிகள் சீல் நடவடிக்கை - போலீசார் குவிப்பு

திருச்சியில் நட்சத்திர விடுதி பல கோடி வாடகை பாக்கி - அதிகாரிகள் சீல் நடவடிக்கை - போலீசார் குவிப்பு

திருச்சி மாநகரில் ஏராளமான நட்சத்திர விடுதிகள் உள்ளது. குறிப்பாக திருச்சி ரேஸ் கோர்ஸ் சாலை பகுதியில் எஸ் ஆர் எம் தங்கும் விடுதியில் உணவகம் நீச்சல் குளம் பார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் வசதிகள் கொண்டது. இங்கு விருந்தினர்கள் தங்குவது மட்டுமின்றி திருமணம் அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் வெளிநாட்டினவர் மற்றும் விமான பைலட் ஆகியோர் இங்கு தங்குவது வழக்கம். திருச்சி விமான நிலையம் அருகில் உள்ள விடுதி அரசு நிலத்தில் 30 ஆண்டுகள் குத்தகைக்கு எடுக்கப்பட்டு மாத வாடகை செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மாதம் 7 லட்சம் ரூபாய் வாடகை செலுத்தப்பட்ட வந்த நிலையில், கடந்த மூன்று வருடங்களாக வாடகை செலுத்தாமல் எஸ் ஆர் எம் விடுதி நிர்வாகம் 30 கோடி பாக்கி வைத்துள்ளது. பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் நெருக்கடியால் 12 கோடி ரூபாய் வாடகை மட்டும் செலுத்தியுள்ளனர்.

30 ஆண்டுகள் அரசு நிலத்தை குத்தகை எடுத்து அதில் தங்கும் விடுதி நடத்தி வந்த எஸ் ஆர் எம் நிர்வாகத்தின் குத்தகை காலம் நேற்றோடு (14.06.2024) நிறைவடைந்து விட்டது. இதனால் வாடகை பாக்கி கட்ட மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில், விடுதி நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வாடகை பாக்கியை வசூலிப்பதற்காக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் காவல்துறையினருடன் தற்பொழுது எஸ் ஆர் எம் விடுதியில் குவிந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தருக்கு சொந்தமான எஸ் ஆர் எம் ஹோட்டலின் குத்தகை காலம் முடிவடைய உள்ள நிலையில் அந்த ஹோட்டலை கையகப்படுத்த அரசு அதிகாரிகள் இன்று வருகை தந்துள்ளனர். இதைப்பற்றி தகவலறிந்த ஹோட்டல் நிர்வாகித்தனரும் பா.ஜ.க, ஐ.ஜே.கே கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஹோட்டலின் நுழைவாயில் கதவை போலீசார் அடைத்ததால் பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் காம்பௌண்ட் சுவரை ஏரி குதித்து உள்ளே வந்தனர். 

இதேபோன்று தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சங்கம் ஹோட்டல் நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்திற்கு வாடகை பாக்கி வைத்துள்ளதால் அந்த ஹோட்டலை சீல் வைக்கும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision