திருச்சி மணிகண்டம் பள்ளபட்டியில் ஜல்லிக்கட்டு - 750 காளைகள் பங்கேற்பு

திருச்சி மணிகண்டம் பள்ளபட்டியில் ஜல்லிக்கட்டு - 750 காளைகள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் மகேந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 750 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. சீறிப்பாய்ந்து வரும் காளைகளை அடக்க 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். சைக்கிள், கட்டில், குடம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

இன்று மாலை 2 -மணி வரை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில்  நான்காவது ஜல்லிக்கட்டு போட்டியாக பள்ளப்பட்டியில்  இன்று நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn