புளியஞ்சோலை வனபகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

புளியஞ்சோலை வனபகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள சுற்றுலாத்தலமான புளியஞ்சோலை வனபகுதியில் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் காவல்துறையினர் உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இவர் யார்? எந்த ஊர் எதற்காக இங்கு வந்தார்? இவரை யாரேனும் கொலை செய்து இங்கு கொண்டு வந்து போட்டார்களா என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். புளியஞ்சோலை என்பது திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியாக அமைந்துள்ளதால் இங்கு நடக்கும் குற்ற சம்பவங்களை நாமக்கல் மற்றும் உப்பிலியபுரம் காவல்துறையினர் வழக்கு பதிய வேண்டிய நிலை உள்ளது.

இங்கு நடைபெறும் குற்ற சம்பவங்கள் எல்லை பிரச்சினை காரணமாக அதை உறுதி செய்ய நாமக்கல் மற்றும் உப்பிலியபுரம் காவல் துறையினர் மெத்தனம் காட்டி வருவதாக இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறி வருகின்றனர். இதனால் குற்ற சம்பவங்கள் இப்பகுதியில் அதிகமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision