பேருந்தில் என்ஜினீயரிங் மாணவன் கழுத்தை அறுத்த சகமாணவன் - பதற்றம் - பரபரப்பு

பேருந்தில் என்ஜினீயரிங் மாணவன் கழுத்தை அறுத்த சகமாணவன் - பதற்றம் - பரபரப்பு

திருச்சியை அடுத்த குளித்தலை அருகே உள்ள புலியூர் செட்டிநாடு இன்ஜினியரிங் கல்லூரியில், திருச்சி மாவட்டம் முசிறி பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவ ரது மகன் நித்தீஷ் குமார் (21). இசிஇ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இதே கல்லூரியில் திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதி கொளத்தரசநல்லூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் அண்ணாமலை என்பவரும் எம் பி ஏ முதலாம் ஆண்டு படித்து வருகி றார்.

இருவரும் கல்லூரி பேருந்தில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். இருவரும் நெருங்கிய நட்புடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கல்லூரிக்கு சென்று வந்த இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டதால் நித்தீஷ்குமார் அண்ணாமலையுடன் பேசுவதை தவிர்த்து உள்ளார். இதனை தொடர்ந்து கல்லூரிக்கு செல்வதற்காக வழக்கம்போல நிதிஷ்குமார் கல்லூரி பேருந்தில் ஏறியுள்ளார். ஆனால் எப்போதும் அண்ணாமலைக்கு பக்கத்தில் உட்காரும் அவர் இன்று வேறொரு மாணவன் பக்கத்தில் அமர்ந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த அண்ணாமலை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நித்தீஷ் குமாரின் கழுத்தை அறுத்துள்ளார். இதனை பார்த்த சக மாணவ, மாணவிகள் அலறி அடித்து சத்தம் போட்டனர். இதனால் கல்லூரி பேருந்து நிறுத்திய டிரைவர் பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு மாணவனை குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு 12 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் இன்ஜினியர் மாணவர் அண்ணாமலையிடம் விசாரணை நடத்தினர். கல்லூரி பேருந்தில் என்ஜினீயரிங் மாணவரை சக மாணவர்கத்தியால் கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் பதற்றத்தையும, பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision