ரூபாய் 1.28 கோடி மதிப்பீட்டில் நிறைவுற்ற திட்டங்கள் தொடக்கம்

ரூபாய் 1.28 கோடி மதிப்பீட்டில் நிறைவுற்ற திட்டங்கள் தொடக்கம்

நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட காந்திபுரம், பாரதிநகர், உய்யகொண்டான் திருமலை கொடாப்பு கூளையன் தெரு, குறத்தெரு ஆகிய 4 இடங்களில்

திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 1.28 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன பொதுக்கழிப்பிடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று (16.04.2023) திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின் குமார், நகரப்பொறியாளர் சிவபாதம்,

மாநகராட்சி அலுவலர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.