தலைமை காவலர் ஸ்ரீதருக்கு 25 லட்சம் நிதி - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தலைமை காவலர் ஸ்ரீதருக்கு 25 லட்சம் நிதி -  முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கடந்த மாதம் 30 ஆம் தேதி போக்குவரத்து தலைமை காவலர் ஸ்ரீதர் என்பவர் திருச்சி மன்னார்புரம் பகுதியில் பணியில் இருந்த போது அதி வேகமாக வந்த கார் அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மீது மோத முயன்றது.

அப்போது அந்த இளைஞர்களை காப்பாற்றிய தலைமை காவலர் ஸ்ரீதர் மீது அந்த கார் மோதி உயிரிழந்தார். அவர் உயிரிழந்து ஒரு மாதம் ஆக உள்ள நிலையில் இதுவரை அவரது குடும்பத்தினருக்கு எந்தவித நிவாரண உதவியும் அரசு சார்பில் கிடைக்கவில்லை. எனவே முதலமைச்சர் தங்களுக்கு உரிய நிவாரண உதவி செய்ய வேண்டும் என உயிரிழந்த ஸ்ரீதரின் மனைவி சுமித்ரா தேவி கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்...பாதுகாப்பு பணியின் போது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த தலைமை காவலரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதுடன், அவரது குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision