சரமாரியாக கற்களால் தாக்கிய கும்பல் - 4 வயது குழந்தை படுகாயம்

சரமாரியாக கற்களால் தாக்கிய கும்பல் - 4 வயது குழந்தை படுகாயம்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அழகாபுரியில் கட்டிட வேலைக்கு தாயுடன் வந்த 4 வயது பெண் குழந்தையை, அதே பகுதியைச் சேர்ந்த வீரமுத்து மகன் செங்குடவன் மற்றும் அவரது உறவினர்கள் கற்களை கொண்டு கொடூரமாக தாக்கி கொண்டனர். இதில் 4 வயது பெண் குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதுக்குறித்து முசிறி தாலுக்காவைச் சேர்ந்த தங்கத்துரை அளித்த புகாரில் தாய் மகளை தாக்கிய கும்பல், அதன் பிறகு அவர்கள் சில வீடுகளை இடித்ததுடன், எனது பெற்றோரையும் மற்றவர்களையும் தாக்கியதுடன், வீட்டுப் பொருட்களையும் தாக்கி உள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் செங்குட்டுவன், இவரது மகன் காளிராஜா, மற்றும் உறவினர்களான காத்தமுத்து, நெப்போலியன், கலையரசி உட்பட சிலர் மீது உப்பிலியாபுரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அனைவரும் தலைமறைவாகிவிட்டனர். செங்குட்டுவனும், அவரது உறவினர்களும் அழகாபுரி, மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பைனான்ஸ் தொழில் செய்தும், நிதி என்ற பெயரில் நிலத்தை அபகரிப்பதாக கூறப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision