திருச்சி விமான நிலையத்தில் 435 கிராம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 435 கிராம் தங்கம் பறிமுதல்

சார்ஜாவில் இருந்து நேற்று இரவு திருச்சி விமானநிலையத்திற்கு வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

பயணிகளின் உடைமைகள் சோதனை செய்த போது 30 பயணிகளிடம் E மற்றும்  I வடிவிலான தங்கக் கட்டிகள், எலக்ட்ரானிக் பூச்சி கொல்லி இயந்திரம் மற்றும் மின்சார அடுப்பு உள்ளிட்டவற்றுக்குள் தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் 20 லட்சத்து 83 ஆயிரத்து 215 ரூபாய் மதிப்புள்ள 435 கிராம் எடை கொண்டது என திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறையினர் தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn