44 ஆவது செஸ் ஒலிம்பியாட் ஜோதி திருச்சி வருகை

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் ஜோதி திருச்சி வருகை

44 ஆவது செஸ் விளையாட்டுப் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரைந டைபெறவுள்ளதை முன்னிட்டு, மதுரையிலிருந்து வரப்பெற்ற செஸ் ஒலிம்பியாட் ஜோதியினை, திருச்சி மாவட்ட அண்ணா விளையாட்டு அரங்கில்  மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் பெற்றுக்கொண்டார்.

அதனை விளையாட்டு வீரர்கள், மாணவர்கள், காவலர்கள் உள்ளடங்கிய ஜோதி ஓட்டக்  குழுவினரிடம் வழங்கி, திருச்சிராப்பள்ளியில் 44ஆவது  செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு ஜோதி ஓட்டத்தினை  தொடங்கி வைத்தார் .

செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்ட விளையாட்டரங்கில் தொடங்கி, மாவட்ட ஆட்சித்தலைவர் முகாம் அலுவலகம் வழியாக மன்னார்புரம்,  ரயில்வே ஜங்சன் மேம்பாலம், ரயில்வே ஜங்சன், தலைம அஞ்சல் நிலையம்  மகாத்மா காந்தியடிகள் சிலை ரவுண்டானா, மாநகராட்சி சாலை, கோர்ட் ரோடு, சாலைரோடு,  காவிரிப் பாலம், அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம், சமயபுரம்

முக்கொம்பு வரை சென்று பின்னர் மாவட்ட விளையாட்டரங்கம் வந்தடைந்துஇதனை தொடர்ந்து இன்று மாலை சென்னைக்கு இந்த ஜோதி எடுத்துச் செல்லப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO