ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் 58 லட்சத்து 77 ஆயிரத்து 888 ரூபாய் உண்டியல் காணிக்கை - இணை ஆணையர் மாரிமுத்து தகவல்

ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் 58 லட்சத்து 77 ஆயிரத்து 888 ரூபாய் உண்டியல் காணிக்கை - இணை ஆணையர் மாரிமுத்து தகவல்

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் பக்தர்களால் செலுத்தப்பட்ட உண்டியல் காணிக்கை ஒவ்வொரு மாதமும் எண்ணப்படுவது வழக்கம்.

அதன்படி பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை உண்டியல்கள் அனைத்தும் கோவில் இணை ஆணையர்  செ.மாரிமுத்து  முன்னிலையில் அறநிலையத்தறை ஊழியர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும்  தன்னார்வலர்களால் திருக்கோவிலில் உள்ள கருடாழ்வார் மண்டபத்தில் இன்று எண்ணப்பட்டது.

இதில் பக்தர்கள் 58 லட்சத்து 77ஆயிரத்து 888ரூபாய் ரொக்கம்,125 கிராம் தங்கம், 1051 கிராம் வெள்ளி, 49 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக பெறப்பட்டன என ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து  தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO