அனைத்து குடும்ப அட்டைதாரருக்கு ஆயிரம் ரூபாய் வழங்க கோரிஆர்ப்பாட்டம்

அனைத்து குடும்ப அட்டைதாரருக்கு ஆயிரம் ரூபாய் வழங்க கோரிஆர்ப்பாட்டம்

திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், அனைத்து குடும்ப அட்டதாரருக்கும் ரூபாய் 1000 வழங்க வேண்டும், சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடைகளை நிரந்தரமாக மூட கோரி பெண்ணுரிமைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

பாஜக திருச்சி மாவட்ட புறநகர் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமயபுரம் நால் ரோடு பகுதி மண்ணச்சநல்லூர் செல்லும் பிரிவு சாலையில் உள்ள காந்தி சிலை அருகே பாரதிய ஜனதா கட்சியின் புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் முன்னிலையில்,

திருச்சி மாவட்ட மகளிர் அணி செயலாளர் கௌரி ஆனந்த் தலைமையில், மகளிர் அணி பொதுச் செயலாளர் நிஷாராணி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn.