அம்மன் கழுத்திலிருந்த 15 பவுன் நகை திருடிய கணவன், மனைவி கைது

அம்மன் கழுத்திலிருந்த 15 பவுன் நகை திருடிய கணவன், மனைவி கைது

திருச்சி மாவட்டம், தொட்டியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரகாளியம்மன் கோவிலில் கடந்த (11.12.2023)-ம் தேதி அம்மன் கழுத்திலிருந்த 15 பவுன் நகை திருடு போனது தொடர்பாக, தொட்டியம் காவல் நிலைய குற்ற எண். 384/23 U/s 380 (2) IPC வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு எதிரிகளை தேடிவந்த நிலையில், மேற்படி வழக்கின் எதிரிகளான சிவசுப்பிரமணியன், (34) S/o மருதை வீரன். திருக்காம்புலியூர், கிருஷ்ணராயபுரம் (Tk)

இவரது மனைவி நித்யா (28) ஆகிய இருவரையும் இன்று (16.12.2023)-ம் தேதி கைது செய்து, அவர்களிடமிருந்து திருடு போன நகைகள் மீட்கப்பட்டு மற்றும் திருடுவதற்கு பயன்படுத்திய TN 48 BE 7465 (Swift ZXI Car) வாகனம் கைப்பற்றப்பட்டு, இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

 அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision