ரேஷன் கடையில் புகுந்த 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு.

ரேஷன் கடையில் புகுந்த 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சி கள்ளர் தெருவில் உள்ள ரேஷன் கடையில் வழக்கம் போல் ஊழியர் கடையை திறந்து பொதுமக்களுக்கு பொருட்களை விநியோகம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென 6 அடி நீளமுள்ள சாரைபாம்பு புகுந்தது.

பாம்பை கண்டதும் கடை ஊழியர் மற்றும் பொதுமக்கள் பயத்தில் அலறி வெளியே ஓடி வந்தனர். இது குறித்து பாம்பு பிடி வீரர் பூபேஷ்-க்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் பூபேஸ் ரேஷன் கடைக்குள் இருந்த சாக்கு முட்டைகளில் பதுங்கி இருந்த 6 அடி நீளம் உள்ள சாரைப் பாம்பை உயிருடன் லாவகமாக பிடித்து கொள்ளிடம் வனப்பகுதியில் விடுவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision