திருச்சி மேம்பாலத்தில் தீப்பற்றி எரிந்த கார்

திருச்சி மேம்பாலத்தில் தீப்பற்றி எரிந்த கார்

தஞ்சாவூர் மாவட்டம் நல்லதம்பி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (43). சிவில் இன்ஜினியரிங் வேலை பார்த்து வரும் இவர், மனைவி, மகளுடன் பொள்ளாச்சி செல்வதற்காக சென்றார்.

அப்போது தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மணப்பாறை வரை சென்றவர் மீண்டும் தஞ்சாவூர் செல்வதற்காக டிவிஎஸ் டோல்கேட் பாலத்தில் காரில் வந்து கொண்டிருந்ந போது தான் காரில் புகை வந்துள்ளது.

உடனே ஓட்டுநர் மணிகண்டன் (30), காரை நிறுத்திவிட்டு அனைவரையும் இறங்க வைத்துள்ளார். பின்னர் கார் முழுவதும் தீ மளமளவென எரிய தொடங்கியது. தகவலறிந்து தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயமில்லை.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision