சிறப்பு குறைத்தீர் கூட்டம் - மனுக்களுக்கு உடனடி தீர்வு

சிறப்பு குறைத்தீர் கூட்டம் - மனுக்களுக்கு உடனடி தீர்வு

தமிழ்நாடு முதல்வரின் தனிப்பரிவு, முதல்வரின் முகவரி, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளரால் பெறப்பெற்ற 71 மனுக்களை இன்று (04.05.2023) திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்,

காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் ஆகியோர்கள் முன்னிலையில் மேற்படி மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதார்களை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு வரவழைக்கப்பட்டு நேரடியாக இரு தரப்பினரையும் விசாரனை மேற்கொண்டதில் 52 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டும்,

19 மனுக்களுக்கு மேல் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டு கூடிய விரைவில் அதற்கு தீர்வு காணப்படும் என்பதினை இக்குறைதீர்ப்பு முகாம் மூலம் மனுதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn