உப்பிலியபுரத்தை அடுத்துள்ள வெங்கடாசலபுரத்தில் திருநங்கைகளின் வீடு தீ கரையானதால் பரபரப்பு

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள வெங்கடாசலபுரத்தில் திருநங்கைகளின்  வீடு தீ கரையானதால்  பரபரப்பு

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட வெங்கடாசலபுரம் வெள்ளாளர் தெருவில் பிரசாந்தினி, தக்ஷனாஸ்ரீ, தியா,மார்ட்டியானா ஆகிய திருநங்கைகள் நால்வரும் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர். அதே சமயம் தாங்கள் குடியிருக்கும் பகுதியிலேயே புதிதாக வீடு கட்டுவதற்காக கட்டுமான

பணிகளுக்கான கடன் சம்பந்தமாக துறையூர் பகுதிக்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்த தெரிகிறது, திடீரென அவர்கள் வீட்டில் இருந்து கரும்புகை வருவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் தீ விபத்து ஏற்பட்டதை உணர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் நிலைய அலுவலர் துரைசாமி, மீட்புக் குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீச்சி அடித்து தீயை முழுவதும் அணைத்தனர்.

தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட சேலைகள், கட்டில்,படுக்கை, ஆகியவை முற்றிலும் எரிந்து தீக்கிரையானது. மர பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் தங்க செயின், வெள்ளிப் பொருட்கள் அதிர்ஷ்டவசமாக தப்பித்தன. இருப்பினும் மர பீரோவில் கட்டிட பணிகளுக்காக வைக்கப்பட்டு இருந்த 1,70000 ரூபாய் மாயமாகி உள்ளதாக உப்பிலியபுரம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

 இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் இது விபத்தா அல்லது மரும நபர்களின் கைவரிசை என தீவிர விசாரணை செய்து வருகின்றனர் அப்பகுதியில் உள்ள மக்களிடையே திருநங்கைகள் வீட்டில் உள்ள பொருள்கள் தீயில் கருகியது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision