24 மணி நேரம் தேடி மீட்கப்பட்ட உடல் - தீயணைப்பு வீரர் ஒருவர் காயம்

24 மணி நேரம் தேடி மீட்கப்பட்ட உடல் - தீயணைப்பு வீரர் ஒருவர் காயம்

திருச்சி ஜெயில் பேட்டை சேர்ந்த ராஜசேகர் (37) நேற்று தனது நண்பர்களுடன் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். குளித்துக் கொண்டிருக்கும் பொழுது இவருடன் சேர்ந்து நான்கு நண்பர்களும் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். மூவரையும் அங்கு இருந்த சலவைத் தொழிலாளர்கள் காப்பாற்றியுள்ளனர். இவரை மட்டும் காப்பாற்ற முடியவில்லை.

உடனடியாக ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரை தொடர்ந்து தேடினர். பிறகு அப்பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் ஒருவருக்கும் சிறு காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைக்கப்பட்டார். பின்பு படகுமூலம் ராஜசேகரை தீயணைப்பு வீரர்கள் தேடி வந்த நிலையில் இன்று காலை அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 24 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் இவர் உடலை மீட்டு உள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

 #டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision