திருச்சியில் ஒரு ஊர் கபாடி போட்டி

திருச்சியில் ஒரு ஊர் கபாடி போட்டி

அப்போலோ முருகன் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் அமெச்சூர் கபாடி கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் பரிசு கபடி போட்டி திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே தலகிராமம் மாகாளிக்குடி மாரியம்மன் கோவில் திடலில் தொடங்கியது. இந்த கபாடி போட்டியில் பங்கேற்பதற்காக திருச்சி மட்டுமில்லாமல் கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட கபாடி குழு வீரர்கள் கலந்துகொண்டு பங்கேற்று வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து இந்த கபடி போட்டியில் நுழைவு கட்டணம் ரூபாய்.600, முதல் பரிசு ரூபாய் 20 ஆயிரம், 7 அடி சூழற்கோப்பை எல் இ டி டிவி, இரண்டாம் பரிசு ரூபாய்15 ஆயிரம், 6 அடி சூழற்கோப்பை மற்றும் பீரோ, மூன்றாம் பரிசு ரூபாய் 10 ஆயிரம், 5 அடி சூழற்கோப்பை மற்றும் டிரேசிங் டேபிள், நான்காம் பரிசு ரூபாய் 10 ஆயிரம், 5 அடி சூழற்கோப்பை மற்றும் டிரேசிங் டேபிள் ஆகிய பரிசுகள் வழங்கப்படுகிறது.

மேலும் கால் இறுதியில் வெற்றி வாய்ப்பை இழக்கும் நாண்கு அணிகளுக்கு கட்டில் மற்றும் சிறப்பு பரிசு வழங்கப்படும். இந்த ஒரு கபடி போட்டியில் பங்கேற்பதற்கு ஆதார் கார்டு கொண்டு வரவும். ப்ரோ கபாடி விதிமுறையின் படி நடைபெறும் ஆட்டத்தை மாற்றி அமைக்கும் உரிமை விழாக்குழுவிற்கு உண்டு. நடுவர் தீர்பே இறுதியானது அதுவே உறுதியானது. அனைவருக்கும் மாபெரும் அன்னதான வழங்கப்படும். அனைத்து அணிகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும்.

 50 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து வரும் அணிகளுக்கு ஒரு வழி பயண செலவு வழங்கப்படும். அப்போலோ முருகன் ஸ்போர்ட்ஸ் கிளப் - மாகாளிகுடி கபடி வீரர்கள் வழங்குகிறார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision