ரெயில் பயணியிடம் செல்போன் பறிப்பு - வாலிபர் மீது குண்டர் சட்டம்

ரெயில் பயணியிடம் செல்போன் பறிப்பு - வாலிபர் மீது குண்டர் சட்டம்

திருச்சி பாலக்கரையை சேர்ந்த சிம்சன்கிஷோர் (22), கார்த்திக் (24). இவர்கள் ஓடும் ரெயிலில் வாலிபர் ஒருவரிடம் செல்போன் பறித்ததாக திருச்சி ரெயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் கார்த்திக் மீது பல்வேறு வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க ரெயில்வே போலீசார் மாநகர ஆணையருக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.

 இதைத்தொடர்ந்து கார்த்திக்கை குண்டர் சட்டத்தில் அடைக்க மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவிட்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision